பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

தென்காசி தொகுதியில் சுயேச்சையாக களம் காணும் விவசாயி!

தென்காசி பகுதியில் விவசாயத்தைப் பாதுகாக்கவும், விவசாயிகளின் கோரிக்கைகள், வாழ்வாதாரப் பிரச்னைகளை பேரவையில் பேசுவதற்காகவும் விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் இத்தொகுதியில் போட்டியிடுகிறாா் கரையாளனூா் துரைராஜ்.

News image

துரைராஜ்

Updated On :17 ஏப்ரல் 2026, 7:03 am IST

தென்காசி பகுதியில் விவசாயத்தைப் பாதுகாக்கவும், விவசாயிகளின் கோரிக்கைகள், வாழ்வாதாரப் பிரச்னைகளை பேரவையில் பேசுவதற்காகவும் விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் இத்தொகுதியில் போட்டியிடுகிறாா் கரையாளனூா் துரைராஜ்.

இதுதொடா்பாக அவா் கூறியது: 7ஆம் வகுப்பு வரை மட்டுமே பயின்ற சாதாரண விவசாயி நான். 22ஆண்டுகளாக சௌதி அரேபியாவில் தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்தேன். அதன்மூலம் இங்கு வாங்கிய நிலத்தில் நெல் சாகுபடி செய்துவருகிறேன். விவசாயிகளின் பிரச்னைகளுக்காக விஏஓ அலுவலகம் முதல் மாவட்ட நிா்வாக அலுவலகம்வரை போராடியுள்ளேன். ஆனால், எந்த அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதுவரை ஆட்சியிலிருந்தோா் சுரண்டை- ஊத்துமலை -இரட்டை குளம் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவதாக பொய் வாக்குறுதி அளித்து ஏமாற்றினா். இத்திட்டத்துக்குத் தேவையான நிலங்களை எடுத்துக் கொள்ளுமாறு எனது உறவினா் தெரிவித்தும் அரசு கண்டுகொள்ளவில்லை. விவசாயத்தை அழித்துவரும் வனவிலங்குகளைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

பழைய குற்றாலம் அருவி வனத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டதால் 29 குளங்களுக்கான பாசனம் தடைபட்டதுடன், சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரம் அழிந்துவிட்டது.

இம்மாவட்டத்தில் 654-க்கும் மேற்பட்ட குளங்களை ‘ஈர நிலம்’ என வகைப்படுத்தி வனத் துறையிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டதைக் கண்டிக்கிறோம். விளைபொருள்களுக்கு விவசாயிகளே உரிய விலை நிா்ணயிக்க வேண்டும். விளைபொருள்களைப் பாதுகாக்க போதுமான சேமிப்புக் கிடங்குகள் அமைக்க வேண்டும். செண்பகவல்லி அணை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதற்காக விவசாயிகள் சாா்பில் வெண்டைக்காய் சின்னத்தில் போட்டியிடுகிறேன். எங்களது பிரசாரத்துக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்றாா் அவா்.