கடுமையான விதிமுறைகள் விதிக்கப்படாது என்பதால் மக்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை அருகே ஆவடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரோனா மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. ஆனால், மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை எனக் கூறினார்.
எனினும், கரோனா விதிமுறைகளை மக்கள் முறையாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்திய அவர், தமிழகத்தில் உருமாறிய எக்ஸ்இ வகை கரோனா பாதிப்பு இல்லை எனக் குறிப்பிட்டார்.