இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் மாதவரம், அம்பத்தூர், சோழிங்கநல்லூர் ஆகிய மூன்று பால் பண்ணைகளின் வாயிலாக சமன்படுத்தபட்ட பால், நிலைப்படுத்தப்பட்ட பால், கொழுப்புசத்து நிறைந்த பால், இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் என்ற வகைகளில் அரை லிட்டர் மற்றும் ஒரு லிட்டராக நாளொன்றுக்கு 14.55 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்பட்டு நுகர்வோர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. இந்த பால் பாக்கெட்டுகள் தயாரிக்கப்படும் போது, இயந்திரங்கள் சோதனை செய்யப்பட்டு நல்ல நிலையில் உள்ளனவா என பணியாளர்களால் உறுதி செய்யப்பட்டு அதன் பின்பு பால் பாக்கெட்டுகள் தயாரிக்கப்படுகின்றன.