வால்பாறையில்  கனமழை: 3-வது முறையாக சோலையாறு அணை திறப்பு! (விடியோ)

கோவை வால்பாறையில்  கனமழை காரணமாக மூன்றாவது முறையாக சோலையாறு அணை திறக்கப்பட்டுள்ளது. 
சோலையாறு அணை திறப்பு
சோலையாறு அணை திறப்பு
Updated on
1 min read

கோவை வால்பாறையில்  கனமழை காரணமாக மூன்றாவது முறையாக சோலையாறு அணை திறக்கப்பட்டுள்ளது. 

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சோலையாறு அணை 165 கன அடி கொள்ளளவை எட்டியது.

இதையடுத்து அணையின் மூன்று மதகுகளும் திறக்கப்பட்டு சுமார் 10,850 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 

இதனால் கரையோரத்தில் உள்ளவர்கள் மிகவும் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

வால்பாறையில் 122 மில்லி மீட்டர், மேல்நீராறு 142 மில்லி மீட்டர், கீழ்நீராறு 95 மில்லி மீட்டர், சோலையார் 85 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

இதன் உபரி நீர், பரம்பிக்குளம் ஆழியார் பகுதிக்கு சுமார் 6,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

இதனைக் காண்பதற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் அங்கு வந்து செல்கின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com