மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

தமிழக மதுக்கடைகளில் ஆக.14-ல் எத்தனை கோடிக்கு விற்பனை தெரியுமா?

தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளில் ஆகஸ்ட் 14ஆம் தேதி ஒருநாள் மட்டும் விற்பனை செய்யப்பட்ட விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

News image
Updated On :16 ஆகஸ்ட் 2022, 11:56 am IST

தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளில் ஆகஸ்ட் 14ஆம் தேதி ஒருநாள் மட்டும் விற்பனை செய்யப்பட்ட விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

சுதந்திர நாளையொட்டி ஆகஸ்ட் 15ஆம் தேதி மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிப்பது வழக்கம். இதையொட்டி, முந்தைய நாளே இரண்டு நாள்களுக்கு தேவையான மதுபானங்களை வாடிக்கையாளர் வாங்குவதும் வழக்கமான ஒன்றுதான்.

இந்நிலையில், ஆகஸ்ட் 14ஆம் தேதி ஒருநாளில் மட்டும் தமிழகத்தில் ரூ. 273 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதில், மதுரை மண்டலத்தில் ரூ. 58.26 கோடி, சென்னை மண்டலத்தில் ரூ. 55.77 கோடி, சேலம் மண்டலத்தில் ரூ. 54.12 கோடி, திருச்சி மண்டலத்தில் ரூ. 53.48 கோடி, கோவை மண்டலத்தில் ரூ. 52.29 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.