மின்வாரியத்தின் அலட்சியம்: ரூ.26 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

நெல்லை அருகே மின்சாரம் தாக்கி இறந்த தந்தை, மகனின் குடும்பத்துக்கு ரூ.26 லட்சம் இழப்பீடாக வழங்க உயர் நீதிமன்றக் கிளை  உத்தரவு பிறப்பித்துள்ளது.
மின்வாரியத்தின் அலட்சியம்: ரூ.26 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

நெல்லை அருகே மின்சாரம் தாக்கி இறந்த தந்தை, மகனின் குடும்பத்துக்கு ரூ.26 லட்சம் இழப்பீடாக வழங்க உயர் நீதிமன்றக் கிளை  உத்தரவு பிறப்பித்துள்ளது.

தந்தை, மகன் இறந்த ஆண்டிலிருந்து கணக்கிட்டு 6% வட்டியுடன்  3 மாதத்திற்குள் இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றக் கிளை  உத்தரவிட்டுள்ளது.

அறுந்து தொங்கிய மின்சாரக் கம்பி உரசியதில் தனது தந்தை, சகோதரர் உயிரிழந்ததாக முத்துக்குமார் என்பவர் தொடுத்த மனு தொடுத்தார். இதையடுத்து மின்சாரம் தாக்கி இறந்த தந்தை, மகனின் குடும்பத்துக்கு ரூ.26 லட்சம் இழப்பீடாக வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

மின்கம்பி அறுந்து தொங்கும்போதே மின்சாரத்தை துண்டித்திருக்க வேண்டும். மின்வாரியத்தின் அலட்சிய போக்கின் காரணமாகவும், சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தினாலும் விபத்து ஏற்பட்டுள்ளது என்று நீதிபதி விஜய குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com