சென்னையிலிருந்து துபை செல்லவிருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் விமான நிலையத்தில் இருந்து துபை புறப்பட இருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னையில் விமான நிலையத்தில் இருந்து துபை புறப்பட இருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

சென்னையில் இருந்து இன்று காலை 7.30 மணிக்கு துபை புறப்பட இண்டிகோ விமானம் தயாராக இருந்தது. இந்நிலையில், அந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தொலைபேசி வழியாக மர்ம நபர் தகவல் தெரிவித்துள்ளார். 

வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதை அடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் விமானத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

துபை செல்லும் இண்டிகோ விமானத்தில் 167 பயணிகள் பயணிக்கவிருந்தனர். வெடிகுண்டு மிரட்டலால் விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com