மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடிக்கத் தடை

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் காற்று 60 கி.மீ. வேகத்தில் வீசுவதால் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் காற்று 60 கி.மீ. வேகத்தில் வீசுவதால் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாம்பன், கீழக்கரை, ஏர்வாடி, வாலிநோக்கம் துறைமுகங்களில் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. மறு உத்தரவு வரும்வரை தென்கடல் பகுதிக்கு மீன் பிடிக்கச் செல்லக் கூடாது என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், தெற்கு அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் திங்கள் கிழமை (டிச.19) சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வேகத்தில் இடையிடையே 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவா்கள் இப்பகுதிக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com