கரூர் பலி! அரசுப் பணி வழக்கின் தன்மையை நீர்த்து போக செய்யும்! மார்க்சிய கம்யூ. எ.வ. வேலுவுக்கு எதிரான லுக்-அவுட் நோட்டீஸுக்கு தடை! சென்னை உயர் நீதிமன்றம்அரசுப் பேருந்துகளில் 'மகளிர் விடியல் பயணம்' பெயர் மாற்றம்!பனகல் அரசரின் புகழ் வரலாற்றில் நிலைத்திருக்கும்! முதல்வர் விஜய்தில்லிக்கு ரெட் அலர்ட்! நாட்டில் மழைக்கு 60 பேர் பலி!மேற்கு ஆசியாவில் மீண்டும் போர் பதற்றம்: வருத்தம் தெரிவித்து இந்தியா அறிக்கை!தங்கம் விலை தொடர்ந்து 4- வது நாளாக விலை குறைந்தது!வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 4-ஆக உயர்வுசகோதரரைத் தாக்கிய வழக்கு: அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராக விலக்கு!முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்! 32 பேருக்கு அரசுப் பணி ஆணை!ஓணம் பண்டிகை! 6 சிறப்பு ரயில்களின் முன்பதிவு தொடங்கியது!
/

மின்வாரியத்தின் வருவாய் உயர்ந்திருக்கிறது.. ஆனால்: அதிர்ச்சி கொடுக்கும் செந்தில் பாலாஜி

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகு, மின் வாரியத்தின் மாத வருவாய் ரூ.1,000 கோடியாக அதிகரித்திருப்பதாக  மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

News image

அதிர்ச்சி கொடுக்கும் செந்தில் பாலாஜி

Updated On :21 டிசம்பர் 2022, 4:18 pm IST


சென்னை:  தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகு, மின் வாரியத்தின் மாத வருவாய் ரூ.1,000 கோடியாக அதிகரித்திருப்பதாகவும், ஆனாலும், திட்டமிட்டதைவிடவும் இது சற்றுக் குறைவுதான் என்றும் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழக மின்வாரியத்துக்கு கூடுதலாக ஆண்டுக்கு ரூ.19,000 கோடி வருவாய் ஈட்ட வேண்டும் என்று திட்டமிட்டிருந்தோம். ஆனால், தற்போதுவரை சில கட்டணங்களை நாங்கள் சில பிரிவுகளுக்கு அறிவிக்கவில்லை. தற்போதைக்கு மாதத்துக்கு மின்வாரியத்துக்கு வருவாய் ரூ.1,000 கோடியாக உள்ளது என்றும் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுவரை 34,134 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொங்கலுக்குள் 50 ஆயிரத்தை எட்டிவிடும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மின் இணைப்புடன், ஆதார் எண்ணை இணைப்பதற்காக டிசம்பர் 31ஆம் தேதி வரை நடைபெறும் சிறப்பு முகாம்களை மின் நுகர்வோர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதுவரை 1.20 கோடி மின் இணைப்புகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுவிட்டது. இன்னும் 2.67 கோடி மின் இணைப்புகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட வேண்டியுள்ளது என்றார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தும் பணியால், மாதந்தோறும் மின் கட்டணம் அளவிடும் முறை நடைமுறைக்கு வருவதில் தாமதமாகிறது. எனவே, ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணியை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

மின் வாரியத்துக்கு மாத வருவாய் இதுவரை 7 கோடியாக இருந்தது. தற்போது இது 13.71 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.