இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவது என்னவென்றால், ஊழியர்கள்தான் எடுத்திருப்பார்கள் என்பது உறுதி செய்யப்பட்டது. ஒரு வேளை காவல்துறை விசாரணை நடத்தி திருடிய நபரை அடையாளம் கண்டால், அவருக்கு பணிப் பிரச்னை ஏற்படும். வேலையை விட்டே வெளியேற்ற நேரிடலாம். வேறு எங்கும் வேலைக்குச் செல்ல முடியாமல் கூட போகலாம். எனவே, யாருக்கும் பிரச்னை வராமல் திருடியப் பொருளை ஒப்படைக்க வைக்க வேண்டும் என்று நினைத்தே இவ்வாறு செய்ததாகவும், குற்றவாளி யாராக இருந்தாலும் நிச்சயம் இதன் மூலம் ஒரு பாடம் கற்றுக் கொண்டு இனி இதுபோன்ற செயலில் ஈடுபட மாட்டார் என்றும், அவர்களுக்கு உரிய அறிவுறுத்தலும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.