கூட்டுறவு சங்க மசோதாவை திரும்பப் பெறுவதாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சட்டத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
கூட்டுறவு சங்க விதிகளை திருத்தம் செய்யும் சட்ட மசோதா கடந்த ஜனவரி மாதம் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக் காலம் 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாகக் குறைக்கும் வகையில் இருந்தது.
பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருந்த நிலையில் ஆளுநரும் இதுகுறித்து பல்வேறு விளக்கங்களைக் கேட்டிருந்தார்.
இந்நிலையில் கூட்டுறவு சங்க மசோதாவை திரும்பப் பெறுவதாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சட்டத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
இந்த மசோதாவை திருமப் பெறுவதன் மூலம் கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக் காலம் 5 ஆண்டுகளாகவே தொடர்ந்து நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.