இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

கூட்டுறவு சங்க மசோதா வாபஸ்: ஆளுநருக்கு சட்டத்துறை அமைச்சகம் கடிதம்!

கூட்டுறவு சங்க மசோதாவை திரும்பப் பெறுவதாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சட்டத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. 

News image
Updated On :23 டிசம்பர் 2022, 4:44 am

கூட்டுறவு சங்க மசோதாவை திரும்பப் பெறுவதாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சட்டத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. 

கூட்டுறவு சங்க விதிகளை திருத்தம் செய்யும் சட்ட மசோதா கடந்த ஜனவரி மாதம் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக் காலம் 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாகக் குறைக்கும் வகையில் இருந்தது. 

பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருந்த நிலையில் ஆளுநரும் இதுகுறித்து பல்வேறு விளக்கங்களைக் கேட்டிருந்தார். 

இந்நிலையில் கூட்டுறவு சங்க மசோதாவை திரும்பப் பெறுவதாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சட்டத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. 

இந்த மசோதாவை திருமப் பெறுவதன் மூலம் கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக் காலம் 5 ஆண்டுகளாகவே தொடர்ந்து நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.