திருச்சி: பெரியாரின் நினைவு நாளையொட்டி, திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, திமுக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான. கே.என். நேரு இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்வில்,எம்எல்ஏக்கள் சௌந்தர பாண்டியன், ஸ்டாலின் குமார், மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி, மாநகராட்சி மேயர் அன்பழகன், முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி, டோல்கேட் சுப்பிரமணி, மாவட்ட துணை செயலாளர் முத்து செல்வம், விஜயா ஜெயராஜ், லால்குடி நகரத் தலைவர் துரை மாணிக்கம், புத்தூர் தர்மராஜ், பகுதிச் செயலாளர்கள் மோகன்தாஸ், இளங்கோ, ராம்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.