

சென்னை தீவுத்திடலில் 47வது சுற்றுலா மற்றும் தொழில் பொருள்காட்சி வரும் டிசம்பர் 30-ம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
70 நாள் நடக்கும் பொருள்காட்சியில் மக்களைக் கவரும் பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெருகின்றன. கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து பொருள்காட்சியை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதையும் படிக்க: கால்பந்து வீரர் பீலே உடல்நிலை கவலைக்கிடம்!
தமிழக அரசின் நலத்திட்டங்கள், வளர்ச்சிப்பணிகளை அறிந்திடும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களை ஈர்க்கும் வகையில் அனைத்தும் சுற்றுலா பொருள்காட்சியில் இடம் பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.