

பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.2,500 வழங்க வேண்டும் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.1,000-மும், ஒரு கிலோ பச்சரிசி மற்றும் ஒரு கிலோ சா்க்கரையும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், கரும்பு உள்ளிட்ட பொருள்கள் இடம்பெறவில்லை. அறிவிக்கப்பட்ட ரொக்கப்பணமும் குறைவாக உள்ளது.
ஏற்கனவே சொத்து வரி, மின் கட்டணம் மற்றும் விலைவாசி உயா்வால் மக்கள் பல்வேறு துயரங்களைச் சந்தித்து வரும் நிலையில், பொங்கல் பரிசாக ரூ.1,000 மட்டும் வழங்கப்படும் என அறிவித்திருப்பதை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை.
அதிமுக ஆட்சியில் 21 பொருள்களுடன் ரூ.2,500 ரொக்கமும் பொங்கல் பரிசாக வழங்கப்பட்டது. ரொக்கம் குறைவாக அறிவித்திருப்பது ஏழை எளிய மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, தமிழக அரசு மறு பரிசீலனை செய்து, குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.2,500 வழங்க வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.