பதாகை ஏந்தி உதவி கேட்ட ஆந்திர மாணவரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை சந்தித்தார்.
இதுகுறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்ட செய்தியில்,
“தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று காலை தலைமைச் செயலகம் சென்று கொண்டிருந்த போது டிடிகே சாலையில் ‘உதவுங்கள் முதல்வர்’ என்ற வாசகத்தை கொண்ட பதாகையை ஏந்தியபடி சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தார்.
இதைக் கண்ட முதல்வர் தனது காரை நிறுத்தி மாணவரை அழைத்துப் பேசினார். அப்போது, நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதற்கு தமிழக முதல்வருக்கு நன்றி கூறிய ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சதீஷ் என்ற மாணவர், நாடு முழுவதும் விலக்கு பெற்றுத் தர வேண்டுகோள் விடுத்தார்.”