புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மாநில உரிமைகளை அடகு வைத்தவர் பழனிசாமி : மு.க.ஸ்டாலின்

மாநில உரிமைகளை எடப்பாடி பழனிசாமி அடகு வைத்ததாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 

News image

மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)

Updated On :14 பிப்ரவரி 2022, 1:28 pm

DIN

மாநில உரிமைகளை எடப்பாடி பழனிசாமி அடகு வைத்ததாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி காணொலி வாயிலாக பிரசாரம் மேற்கொண்டு அவர் பேசியதாவது, மதுரை மேலூரில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கொச்சைப்படுத்தினார். ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது அப்பாவி மக்கள் மீதும் இளைஞர்கள் மீதும் தடியடி நடத்தப்பட்டது.

அதிமுகவினருக்கு ஆக்கப்பூர்வமான அரசியல் தெரியாது. அவர்களுக்கு அமாவாசை அரசியல்தான் தெரியும். அரசியல் அமாவாசைகள் யாரென்று தெரிந்துதான் மக்கள் தற்போது அதிமுகவினரை புலம்பவிட்டுள்ளார்கள் என்று விமர்சித்தார்.

மிசாவையே பார்த்த என்னை மிரட்ட முடியுமா? என்று கேள்வி எழுப்பிய மு.க.ஸ்டாலின், பழனிசாமியின் பொறுப்பற்ற ஆணவப்பேச்சுக்கு இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்றும் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.