/

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: வாக்களித்தார் நடிகர் விஜய் 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய் தனது வாக்கை பதிவு செய்தார். 

News image
Updated On :19 பிப்ரவரி 2022, 0:09 pm IST

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய் தனது வாக்கை பதிவு செய்தார். 

தமிழகம் முழுவதும் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதில் மாலை 5 முதல் 6 மணி வரை கரோனா நோயாளிகள் வாக்களிக்கலாம் என மாநிலத் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

மொத்தம் 2.79 கோடி வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா். இந்த நிலையில் சென்னை, நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் விஜய் வாக்களித்தார். முன்னதாக வாக்களிக்க வந்த விஜய் கருப்பு நிற முகக்கவசம் அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.