தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுதிய ‘உங்களில் ஒருவன்’ புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க அதிமுக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் எழுதிய சுயசரிதையான ‘உங்களில் ஒருவன்’ புத்தகத்தின் முதல் பாகம் வருகிற பிப்.28 ஆம் தேதி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வெளியாக உள்ள நிலையில் அந்த வெளியீட்டு விழாவில் சில முக்கியத் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
’உங்களில் ஒருவன்’ புத்தகத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிடுகிறார்.