முழு ஊரடங்கு: திருமண விழாவிற்கு செல்ல நாளை அனுமதி

முழு ஊரடங்கான நாளை திருமண விழாவிற்கு செல்ல தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.  
முழு ஊரடங்கு: திருமண விழாவிற்கு செல்ல நாளை அனுமதி

முழு ஊரடங்கான நாளை திருமண விழாவிற்கு செல்ல தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.  
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், கரோனா பரவலை தடுப்பதற்காக, அரசு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட ஞாயிற்றுக்கிழமையில் ஏற்கனவே திருமணம் போன்ற குடும்ப நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி உண்டு.
நிகழ்ச்சிக்கு செல்பவர்கள் திருமண அழைப்பு பத்திரிக்கைகளை காண்பித்து தங்களது பயணங்களை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.

​திருமண மண்டபத்தில் 100 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
​முழு ஊரடங்கு நாட்களில் நடைபெறும் திருமணம் போன்ற விழாக்களுக்கு செல்பவர்களுக்கு காவல் துறை அனுமதி வழங்கி முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com