தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் அறிவிக்கப்பட்ட ஞாயிறு முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது.
தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பு சனிக்கிழமை 10 ஆயிரத்தைத் தாண்டி 11 ஆயிரத்தை நெருங்கியது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 5 ஆயிரம் பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனிடையே, இரவுநேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை (9/1/2022) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு கடந்த வாரம் அறிவித்தது.
இதன்படி, முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. பொதுப் போக்குவரத்தும் இயங்காததால், சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. எனினும், காவல் துறையினர் ஆங்காங்கே கடுமையான வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் 1.20 லட்சம் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிக்க | தோ்வுக்குச் செல்வோருக்காக இன்று மாநகரப் பேருந்துகள் இயக்கம்
கடற்கரைப் பகுதிகளில் நடைபயிற்சி மற்றும் சைக்கிள் பயணம் மேற்கொள்ள சிலர் வந்துள்ளனர். அவர்களை எச்சரித்து காவல் துறையினர் திருப்பு அனுப்பினர்.
எதற்கெல்லாம் அனுமதி?