ஒசூர்: மேக்கேதாட்டு அணை கட்டும் முயற்சியை தடுத்த நிறுத்தக் கோரி ஒசூரில் போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட விவசாயிகைளை உள்வட்டச் சாலை அருகே காவல் துறையினர் தடுத்தி நிறுத்தினர்.
ஓசூர் அருகே கர்நாடக - தமிழக எல்லையில் மேக்கேதாட்டு அணை கட்டும் முயற்சியை தடுத்த நிறுத்தக் கோரி புதன்கிழமை விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒசூரில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகைளை உள்வட்டச் சாலை அருகே தடுத்தி நிறுத்தினர். அப்பொழுது விவசாயிகள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு தலைவர் பிஆர் பாண்டியன் செய்தியாளரிடம் பேசியது.
சென்னை உட்பட 11 மாநகராட்சியில் குடிநீர் பெறுகிற ஒட்டுமொத்த காவிரிப் உரிமையைப் பறிப்பதற்காக ஆட்சியை கர்நாடகத்தில் மீண்டும் பெறுவதற்கான ஒரு வக்கிர புத்தியுடன் சட்டத்திற்கு புறம்பாக காங்கிரஸ் கட்சி மேகதாது அணை கட்ட வலியுறுத்தி வருகிறது.
அங்கே பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் இந்த காலத்தில் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக. இதனை வேடிக்கை பார்க்கிறது மோடி அரசாங்கம். பாஜக காங்கிரஸ் கூட்டு சேர்ந்து கட்ட முயற்சிக்கிறார். அனுமதிக்க மாட்டோம். அவர் கூறுவதை ஏற்க மாட்டோம்.
தமிழகத்தில் கூட்டணி அரசை வன்மையாக கண்டிக்கிறோம். கர்நாடக காங்கிரஸ் கட்சி முயற்சிக்கின்றது. எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மெளனத்தை கலைக்க வேண்டும்.
தமிழக முதல்வர் மௌனம் தொடர்வது ஏற்கத்தக்கதல்ல. விவசாயிகளை உரிமையை முதலமைச்சர் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். விவசாயிகள் காவிரி உரிமை மீட்க தயாராக இருக்கிறோம். நீங்கள் கூட்டத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை முதல்வர் கூட்டவில்ல எனில் நாங்கள் கூட்டுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.