உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

திமுகதான் ஓபிசி இடஒதுக்கீட்டை 31% ஆக உயர்த்தியது: முதல்வர் ஸ்டாலின்

பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 31 சதவீதமாக உயர்த்தியது திமுகதான் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

News image

முதல்வா் மு.க.ஸ்டாலின்

Updated On :1 பிப்ரவரி 2024, 1:44 pm IST

இதரப் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 31 சதவீதமாக உயர்த்தியது திமுகதான் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சமூகநீதி போராட்டம் தொடர்பான இணையவழிக் கருத்தரங்கில் பேசிய முதல்வர் ஸ்டாலின்  இதரப் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 31 சதவீதமாக உயர்த்தியது திமுகதான் என்றும் அனைத்து சமூகங்களின் வளர்ச்சியை உள்ளடக்கிய வளர்ச்சியே சமூகநீதி எனறும் தெரிவித்தார்.

மேலும், இதுகுறித்து பேசிய அவர், ‘ அருந்ததியினருக்கு 3 சதவீதம் உள்ஒதுக்கீடு அளித்ததுடன் மதம் மாறிய பட்டியலினத்தவருக்கு தனி இடஒதுக்கீடு மற்றும் 107 சாதிகளை ஒருங்கிணைத்து மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கியதும் திமுகதான்’ எனக் குறிப்பிட்டார்.

இந்த இணையக் கருத்தரங்கில் ஆந்திரம், மகாராஷ்டிரம் அமைச்சர்கள் பிகார் எதிர்கட்சித் தலைவர் தேஜஷ்வி யாதவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.