அவிநாசி: கூலி உயர்வு பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வலியுறுத்தி தெக்கலூரில் விசைத்தறியாளர்கள் திங்கள்கிழமை கண்டண ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கூலி உயர்வு பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வலியுறுத்தி, திருப்பூர், கோவை மாவட்ட உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளபடி, விசைத்தறியாளர்கள் ஜன.9 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிக்க | தை அமாவாசை: காவிரிக்கரையில் தர்பணம் கொடுக்க குவிந்த மக்கள்
இந்நிலையில், இதுவரை எவ்விதமான தீர்வும் ஏற்படாததால் தெக்கலூரில் அவிநாசி பேருந்து நிறுத்தம் முன் கண்டண ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.