

தமிழகத்தில் 2ஆவது நாளாக கரோனா தினசரி பாதிப்பு 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதில், இன்று புதிதாக 2,385 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 34,77,570-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 1,025 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு 369, திருவள்ளூர் 121, கோவை 118, காஞ்சிபுரம் 84 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக ஒருவரும் கரோனாவுக்கு உயிரிழக்கவில்லை. எனினும் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 38,026 ஆக உள்ளது. இன்று ஒரு நாளில் மட்டும் 1,321 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 34,27,386-ஆக உயர்ந்துள்ளது. தற்போது 12,158 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். கடந்த சில நாள்களாகவே தமிழகத்தில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.