ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

அதிமுக ஒருங்கிணைப்பாளர் நான்தான்: ஓ.பன்னீர்செல்வம்  

கட்சியின் சட்டவிதிப்படி தற்போதுவரை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் நான்தான் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.  

News image
Updated On :2 ஜூலை 2022, 12:55 pm

கட்சியின் சட்டவிதிப்படி தற்போதுவரை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் நான்தான் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

சென்னையில் இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அதிமுக உள்ளிட்ட கட்சிகளை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார் திரௌபதி முர்மு. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக தலைவர்கள் முதலில் திரௌபதி முர்முவுக்கு தங்களது ஆதரவை தெரிவித்துப் பேசினர். எடப்பாடி பழனிசாமியும், தனது ஆதரவை தெரிவித்தார். 

அப்போது, அரங்குக்குள் வந்த ஓ. பன்னீர்செல்வம், கூட்டணிக் கட்சித் தலைவர்களின் வரிசையில் காத்திருந்தார். மேடையிலிருந்து எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் புறப்பட்டுச் சென்றதும், மேடைக்குச் சென்று தனது ஆதரவை தெரிவித்து ஓ. பன்னீர்செல்வம் உரையாற்றினார். அதிமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் பங்கேற்ற நிகழ்ச்சியில், ஓ. பன்னீர்செல்வம் மேடையில் ஏறாமல், தனித்து இருந்தார்.

எடப்பாடி பழனிசாமி கிளம்பும் வரை காத்திருந்து, பிறகு மேடையில் ஏறி, திரௌபதி முர்முவுக்கு தனது ஆதரவை தெரிவித்துக் கொண்டார். 

இந்த நிலையில் திரௌபதி முர்முவை சந்தித்து ஆதரவு அளித்தபின் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டியில், கட்சி சட்டவிதிகளின் படி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக நான் தொடர்கிறேன். குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முக்கு ஆதரவை தெரிவித்திருக்கிறோம். முர்முவை அதிமுக சார்பில் சந்தித்து இதய பூர்வ ஆதரவை தெரிவித்தேன். அதிமுகவில் தற்போது வரை நான்தான் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.