அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்கவுள்ள உறுப்பினர்களுக்கு ‘க்யூஆர் கோட்’ தொழில்நுட்ப வசதியுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில், ஒற்றைத் தலைமை விவகாரத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.
இந்நிலையில், பொதுக்குழு அல்லாத நபர்கள் மண்டபத்திற்குள் நுழைவதை தடுக்க நவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய ‘க்யூஆர் கோட்’ அடையாள அட்டை அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | பொதுக்குழு விவகாரம்: ஓபிஎஸ், இபிஎஸ் மனுக்கள் சற்றுநேரத்தில் விசாரணை
மண்டபத்திற்கு வெளியே அடையாள அட்டையை சரிபார்த்த பிறகே உறுப்பினர்கள் கூட்டத்திற்கு அனுமதிக்கப்படவுள்ளனர்.
கடந்த ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் போலி அடையாள அட்டையுடன் மர்ம நபர்கள் பொதுக்குழுவுக்கு வந்ததாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், இந்த ஏற்பாட்டை கட்சித் தலைமை செய்துள்ளது.