வெள்ளப் பெருக்கு: காவிரி கதவணையில் படகுப் போக்குவரத்து நிறுத்தம்!

பூலாம்பட்டி காவிரி கதவணை நீர்த்தேக்கப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், அணைப்பகுதியில் இயக்கப்பட்டு வந்த விசைப்படகு போக்குவரத்து தொடர்ந்து இரண்டாவது நாளாக நிறுத்தப்பட்டுள்ளது
காவிரி கதவணையில் படகுப் போக்குவரத்து நிறுத்தம்!
காவிரி கதவணையில் படகுப் போக்குவரத்து நிறுத்தம்!


எடப்பாடி: பூலாம்பட்டி காவிரி கதவணை நீர்த்தேக்கப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், அணைப்பகுதியில் இயக்கப்பட்டு வந்த விசைப்படகு போக்குவரத்து தொடர்ந்து இரண்டாவது நாளாக நிறுத்தப்பட்டுள்ளது

எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கதவணை நீர்த்தேக்கத்தில், நீர் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இதனை இரு மாவட்டங்களையும் சேர்ந்த அரசு அலுவலர்கள், மாணவர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பயன்படுத்தி வந்த நிலையில், அண்மையில் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டிய நிலையில் அணையிலிருந்து அதிகப்படியான உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.

இதனால், பூலாம்பட்டி கதவணைப் பகுதியில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள சூழலில், பயணிகளின் பாதுகாப்பினை கருதி நேற்று முதல் இப்பகுதியில் இயக்கப்பட்டு வந்த விசைப்படகு போக்குவரத்தினை மாவட்ட நிர்வாகம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

இதனால் மறுகரைக்கு செல்ல சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் சுற்றி கோனேரிப்பட்டி கதவனை பாலம் வழியாக பயணிகள் ஆற்றினை கடந்து வருகின்றனர்.  

வெள்ள அபாயம் குறையும் வரை தொடர்ந்து விசைப்படகு போக்குவரத்து நடைபெறாது எனவும், அதுவரை பயணிகள் பரிசல் மற்றும் இதர பயன்பாட்டின் மூலம் ஆற்றினை கடக்க முயற்சிக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com