கர்நாடக அணைகளிலிருந்து 1.15 லட்சம் கன அடி உபரி நீர் திறப்பு

கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பியதால், உபரிநீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கர்நாடக அணைகளிலிருந்து 1.15 லட்சம் கன அடி உபரி நீர் திறப்பு


கர்நாடக அணைகளிலிருந்து 1.15 லட்சம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக, கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பியதால், உபரிநீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கிருஷ்ணசாகர் அணையிலிருந்து 83.83 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதேபோல் கபினி அணையிலிருந்து 32 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. 

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நீர்வரத்து நேற்று முன்தினம் 1.20 லட்சம் கனஅடியாக அதிகரித்தது. வெள்ளப்பெருக்கு காரணமாக அருவியில் குளிப்பதற்கும், பரிசல் சவாரி செய்வதற்கும் தடை நீடிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com