மதுரை: தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்கை தலைமை நீதிபதியிடம் சமர்ப்பிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டதுள்ளது.
தற்காலிக ஆசிரியா் நியமனத்துக்காக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்யக் கோரி கரூா் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தைச் சோ்ந்த பா்வதம் என்பவா், சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தாா்.
அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியா்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்புக்கு தடை கோரிய மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை நேற்று(செவ்வாய்க்கிழமை) உத்தரவிட்டுருந்தது.
மேலும், இந்த வழக்கை தலைமை நீதிபதியிடம் சமர்ப்பிக்க நீதிமன்ற பதிவாளருக்கு உயர்நீதி மன்ற மதுரைக் கிளை உத்திரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பும், மதுரை கிளைக் தீர்ப்பும் முரண்பாடாக உள்ளதால் தலைமை நீதிபதியிடம் சமர்ப்பிக்க உத்திரவிட்டுள்ளது.