குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரெளபதி முர்முவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 
Published on

நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரெளபதி முர்முவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் தனது சுட்டுரைப் பதிவில், “இந்தியாவின் மிக உயர்ந்த அரசியலமைப்பு பொறுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரெளபதி முர்முவுக்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சமூகத்தின் ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து உயர்ந்துள்ள அவர் குரலற்றவர்களுக்கு உடன் நின்று அரசியலமைப்பின் வெற்றியை பறைசாற்றுவீர்கள் என நம்புவதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com