கரோனா தொற்றிலிருந்து மீண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று தலைமைச் செயலகம் செல்கிறார்.
கடந்த ஜூலை 12 ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
எனினும், காய்ச்சல் மற்றும் உடற்சோர்வு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த ஜூலை 14 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
தொடர்ந்து, கடந்த திங்கள்கிழமை(ஜூலை 18) மருத்துவமனையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மேலும் சில நாளில் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.
இதையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகம் சென்று தன் பணியை தொடங்கவிருக்கிறார். 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஏற்பாடுகள் குறித்து அதிகரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.