நாடாளுமன்றத்தில் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி தர்னா

இடைநீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்திலுள்ள காந்தி சிலையின் முன்பு தர்னாவில் ஈடுபட்டு வருகின்றனர்.
தர்னாவில் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள்
தர்னாவில் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள்
Published on
Updated on
1 min read

இடைநீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்திலுள்ள காந்தி சிலையின் முன்பு தர்னாவில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்களவை நடத்தவிடாமல் அவைத் தலைவரின் இருக்கை முன்பு நின்று பதாகைகள் ஏந்தி தொடர் அமளியில் ஈடுபட்ட காரணத்திற்காக காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, டி.என்.பிரதாபன், ரம்யா ஹரிதாஸ் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்படுவதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா நேற்று உத்தரவிட்டார்.

இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையின் முன்பு அமர்ந்து இன்று காலை முதல் 4 பேரும் தர்னாவில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இடைநீக்கம் செய்யப்பட்ட உத்தரவின் நகலை கிழித்து தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களவை உறுப்பினர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.பி.க்களும் போராட்த்தில் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 18ஆம் தேதி தொடங்கிய நிலையில், விலை உயர்வு, ஜிஎஸ்டி வரி உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் செய்த அமளியால் ஒரு வாரமாக மக்களவை மற்றும் மாநிலங்களவை முடங்கியது.

இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள எம்.பி.க்களில் மாணிக்கம் தாகூர் மற்றும் ஜோதிமணி ஆகியோர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com