மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது: முதல்வர்

தொல்லைகளை, அவமானத்தை மாணவிகள் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது: முதல்வர்
Updated on
1 min read

தொல்லைகளை, அவமானத்தை மாணவிகள் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். 

சென்னையிலுள்ள குருநானக் கல்லூரியில் ஐம்பதாவது ஆண்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துக் கொண்டு பேசியதாவது:

மாணவர்களுக்கு தற்கொலை எண்ணம் கூடவே கூடாது; தலை நிமிரும் எண்ணமே வேண்டும். கல்வி நிறுவனம் நடத்துவோர் அதை தொழில் வர்த்தகமாக இல்லாமல் தொண்டாக நினைக்க வேண்டும். தொல்லைகளை, அவமானத்தை மாணவிகள் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் பெற்றோர்களுடன் மனம் விட்டு பேசுங்கள். படிப்பு கல்வி முடிவதில்லை. பாடம் நடத்திய பிறகு ஆசிரியர் பணி முடிந்துவிடாது. கரோனா தொற்றால் எனது தொண்டை பாதிக்கப்பட்டு இருந்தாலும் தொண்டு பாதிக்கப்படவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com