திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

நெல்லை அருகே லாரி கவிழ்ந்து ஆசிரியை கணவர் பலி: பதைபதைக்கும் சிசிடிவி காட்சி 

நெல்லை அருகே சவுக்கு கம்புகளை ஏற்றி வந்த லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் கவிழ்ந்ததில் லாரிக்கு அடியில் சிக்கிய ஆசிரியையின் கணவர் பலியானார்.

News image
Updated On :29 ஜூலை 2022, 1:15 pm IST

நெல்லை அருகே சவுக்கு கம்புகளை ஏற்றி வந்த லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் கவிழ்ந்ததில் லாரிக்கு அடியில் சிக்கிய ஆசிரியையின் கணவர் பலியானார். இதுகுறித்து பதைபதைக்கும் வைக்கும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

புதுச்சேரியில் இருந்து நெல்லை மாவட்டம் வள்ளியூருக்கு சவுக்கு கம்புகளை ஏற்றி வந்த லாரி ஒன்று புதன்கிழமை முன்தினம் நெல்லை நோக்கி வந்து கொண்டிருந்தது. வள்ளியூரை சேர்ந்த இம்மாணுவேல் லாரியை ஓட்டி வந்தார். லாரி நெல்லை கங்கைகொண்டான் சோதனை சாவடி அருகே வந்துகொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மின்னல் வேகத்தில் லாரி சென்ற போது எதிரே இருந்த பேரிகார்டரில் மோதாமல் இருக்க ஓட்டுநர் பிரேக் அடித்தபோது லாரி திடீரென சறுக்கி தலைகீழாக கவிழ்ந்தது. 

அப்போது லாரிக்கு முன்னால் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த தென்காசி மாவட்டம் ஊத்துமலை பகுதியைச் சேர்ந்த மதியழகன் லாரிக்கு அடியில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்தார். இவரது மனைவி சாத்தூரில் ஆசிரியராக பணிபுரிகிறார். 

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற கங்கைகொண்டான் காவல்துறையினர் மதியழகன் உடலை மீட்டு உடல் கூறாய்வுக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஓட்டுநர் இம்மாணுவேலிடம் விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் கண்ணிமைக்கும் நேரத்தில் லாரி சறுக்கி கவிழ்வது போன்று காட்சிகள் இடம் பெற்றுள்ள காட்சி பார்ப்போரை பதைபதைக்க வைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.