திருவள்ளூர்: திரௌபதி அம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருவள்ளூர் பெரும்பாக்கம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ பஞ்சபாண்டவர் சமேத ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா கடந்த 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது.
திருவள்ளூர்: திரௌபதி அம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருவள்ளூர் பெரும்பாக்கம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ பஞ்சபாண்டவர் சமேத ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா கடந்த 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது.

இந்த விழாவில் 16 நாள்கள் திருமுருக கிருபானந்த வாரியார் சீடர் லதா கதிர்வேல் குழுவினரின் மகாபாரத சொற்பொழிவுகளும் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலையில் திரௌபதி அம்மன் அர்ஜுனன் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. திருக்கோவிலில் திரௌபதி அம்மனுக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து திரௌபதி அம்மன் அர்ஜுனன் சுவாமி மணகோலத்தில் எழுந்தருளி காட்சி அளித்தார். பின் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இந்த திருக்கல்யாணம் வைபோகத்தில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வரும் ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை துரியன் படுகளம், மாலை தீமிதி திருவிழாவும் நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com