கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர் செல்வதற்கு போதிய பேருந்துகள் இயக்கப்படாததைக் கண்டித்து பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பிற மாவட்டங்களுக்கு இரவு நேரத்தில் பேருந்துகள் முறையாக இயக்கப்படுவதில்லை என கூறப்படுகிறது. இதனால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இந்நிலையில், நேற்று ஜூன் மாதத்தின் முதல் நாள் என்பதுடன் சுப முகூர்த்த நாள் என்பதால் வெளியூர் செல்வதற்காக மக்கள் அதிகயளவில் கோயம்பேடு பேருந்து நிலையம் வந்தனர்.
ஆனால், நேற்று புதன்கிழமை மாலை முதல் இரவு 10 மணி வரை சாதாரண கட்டண பேருந்துகளைவிட சொகுசு பேருந்துகள் மட்டுமே அதிகயளவில் இயக்கப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து ஒன்றுதிரண்ட பொதுமக்கள் பேருந்துகளை சிறைபிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அடுத்தடுத்து சாதாரண கட்டண பேருந்தகள் இயக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து மக்கள் மறியலை கைவிட்டு தங்களின் பயணத்தை தொடர்ந்தனர்.
கோயம்பேடு பேருந்துநிலையத்தில் பயணிகள் திடீர் போராட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதையும் படிக்க | பொதுத் தேர்வு எழுதாத 6.79 லட்சம் மாணவர்களுக்கு துணைத்தேர்வு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக

மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! எதிர்சேவையில் ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு!!

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


