சென்னை: ஜூன் 10-ஆம் தேதி முதல் ஜூம் 26-ஆம் தேதி வரை மாவட்ட வாரியாக செஸ் போட்டிகளை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் வெற்றிபெறும் 2 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு செஸ் ஒலிம்பியாட்டை நேரில் பார்க்க வாய்ப்பளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: தமிழகத்தில் ஜூன் 10 முதல் மாவட்ட வாரியாக செஸ் போட்டி
இந்த நிலையில் ஜூன் 10 ஆம் தேதி முதல் ஜூன் 26 ஆம் தேதி வரை தமிழகத்தில் மாவட்ட வாரியாக செஸ் போட்டிகளை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசும், அகில இந்திய செஸ் கூட்டமைப்பும் இணைந்து செஸ் தொடரை நடத்துகின்றன. செஸ் தொடரில் பங்கேற்க விரும்பும் மானவர்கள் https://prs.aicf.in/players-ல் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான செஸ் போட்டி அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.