வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

திருடிய லாக்கரை நகைகளோடு குப்பைத் தொட்டியில் வீசிய திருடர்கள்: ஏன்? எதற்கு?

மதுரையில், அடகுக்கடையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு  உள்ளே நுழைந்து நகைகள் இருக்கும் லாக்கரை திருடி வந்தவர்கள் லாக்கரை உடைக்க முடியாததால் அதை குப்பைத் தொட்டியில் வீசி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

News image

திருடிய லாக்கரை நகைகளோடு குப்பைத் தொட்டியில் வீசிய திருடர்கள்: ஏன்? எதற்கு?

Updated On :7 ஜூன் 2022, 1:15 pm IST

மதுரையில், அடகுக்கடையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு  உள்ளே நுழைந்து நகைகள் இருக்கும் லாக்கரை திருடி வந்தவர்கள் லாக்கரை உடைக்க முடியாததால் அதை குப்பைத் தொட்டியில் வீசி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

திட்டம் தீட்டி நகைக்கடைக்குள் நுழைந்து, அவ்வளவு பெரிய லாக்கரையே தூக்கி வந்த திருடர்கள், அதனை உடைக்க முடியாமல் குப்பையில் வீசியுள்ளனர்.

மதுரை கோ. புதூரைச் சோ்ந்தவா் வைத்தியநாதன். இவா் அதே பகுதியில் உள்ள பாரதியாா் தெருவில் நகை அடகுக் கடை நடத்தி வருகிறாா். ஞாயிற்றுக்கிழமை மாலை அடகுக்கடையை வைத்தியநாதன் மூடி விட்டுச் சென்றுள்ளாா். இந்நிலையில், அன்று நள்ளிரவில் அடகுக்கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் அடகு நகைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த லாக்கரை உடைக்க முயன்றுள்ளனா். ஆனால் லாக்கரை உடைக்க முடியாததால் அதை மட்டும் ஒரு கிலோ மீட்டா் தூரம் தூக்கிச் சென்றுள்ளனர்.

பிறகு அதை உடைக்க முயன்றுள்ளனர். ஆனால், முடியாததால், அதை அங்குள்ள குப்பைத் தொட்டியில் வீசி விட்டு தப்பிச் சென்றுள்ளனா். 

இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலையில் தெருவை சுத்தம் செய்ய வந்த மாநகராட்சி தூய்மைப்பணியாளா்கள் லட்சுமி மற்றும் முத்து ஆகியோா் குப்பைத் தொட்டியில் லாக்கா் கிடப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்து, போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

அதன்பேரில் கோ. புதூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று லாக்கரை மீட்டனா். மேலும் தடயவியல் நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு லாக்கரில் இருந்த கைரேகை உள்ளிட்ட தடயங்கள் சேகரிக்கப்பட்டன. அத்துடன் அடகுக் கடைக்கும் சென்று தடயங்களை சேகரித்தனா். 

அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். இந்நிலையில், குப்பைத்தொட்டியில் லாக்கா் கிடப்பதைக் கண்டவுடன் போலீஸாருக்கு துரிதமாக தகவல் அளித்த தூய்மைப்பணியாளா்களை காவல்துறை அதிகாரிகள் பாராட்டினா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.