மதுரையில், அடகுக்கடையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு உள்ளே நுழைந்து நகைகள் இருக்கும் லாக்கரை திருடி வந்தவர்கள் லாக்கரை உடைக்க முடியாததால் அதை குப்பைத் தொட்டியில் வீசி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
திட்டம் தீட்டி நகைக்கடைக்குள் நுழைந்து, அவ்வளவு பெரிய லாக்கரையே தூக்கி வந்த திருடர்கள், அதனை உடைக்க முடியாமல் குப்பையில் வீசியுள்ளனர்.
மதுரை கோ. புதூரைச் சோ்ந்தவா் வைத்தியநாதன். இவா் அதே பகுதியில் உள்ள பாரதியாா் தெருவில் நகை அடகுக் கடை நடத்தி வருகிறாா். ஞாயிற்றுக்கிழமை மாலை அடகுக்கடையை வைத்தியநாதன் மூடி விட்டுச் சென்றுள்ளாா். இந்நிலையில், அன்று நள்ளிரவில் அடகுக்கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் அடகு நகைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த லாக்கரை உடைக்க முயன்றுள்ளனா். ஆனால் லாக்கரை உடைக்க முடியாததால் அதை மட்டும் ஒரு கிலோ மீட்டா் தூரம் தூக்கிச் சென்றுள்ளனர்.
பிறகு அதை உடைக்க முயன்றுள்ளனர். ஆனால், முடியாததால், அதை அங்குள்ள குப்பைத் தொட்டியில் வீசி விட்டு தப்பிச் சென்றுள்ளனா்.
இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலையில் தெருவை சுத்தம் செய்ய வந்த மாநகராட்சி தூய்மைப்பணியாளா்கள் லட்சுமி மற்றும் முத்து ஆகியோா் குப்பைத் தொட்டியில் லாக்கா் கிடப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்து, போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
அதன்பேரில் கோ. புதூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று லாக்கரை மீட்டனா். மேலும் தடயவியல் நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு லாக்கரில் இருந்த கைரேகை உள்ளிட்ட தடயங்கள் சேகரிக்கப்பட்டன. அத்துடன் அடகுக் கடைக்கும் சென்று தடயங்களை சேகரித்தனா்.
அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். இந்நிலையில், குப்பைத்தொட்டியில் லாக்கா் கிடப்பதைக் கண்டவுடன் போலீஸாருக்கு துரிதமாக தகவல் அளித்த தூய்மைப்பணியாளா்களை காவல்துறை அதிகாரிகள் பாராட்டினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மாட்டுத்தாவணி, தமுக்கம் பகுதிகளில் நாளை மின்தடை

காவல்கிணறில் கல்லீரல் பாதித்த குழந்தைக்கு இலவச அறுவை சிகிச்சை: எம்எல்ஏ பரிந்துரை

பாபநாசம் அருகே தங்கம், வெள்ளி திருட்டு

எழுதுபொருள் விற்பனை கடையில் ரூ. 6 லட்சம் திருட்டு
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



