சென்னையில் பல்வேறு இடங்களில் மாலை முதல் பரவலாக மழை பெய்து வருகின்றது.
அம்பத்தூர், போரூர், கொரட்டூர், வளசரவாக்கம், விருகம்பாக்கம், பாரிமுனை, கோடம்பாக்கம், தி நகர், அண்ணா நகர், பாரிமுனை, சாலிகிராமம், கோயம்பேடு, நொளம்பூர், வானகரம், மதுரவாயல் உள்ளிட்ட இடங்களில் மாலை 6 மணிமுதல் மிதமான மழை பெய்து வருகின்றது.
இதையும் படிக்க | செல்லிடப்பேசியால் தூக்கம் தொலைகிறதா? ஒரே வழி
இதனால், அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு செல்வோர் மிகவும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
நேற்று இரவு 10 மணிமுதல் இன்று அதிகாலை வரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.