இந்து மதத்திற்கு எதிராக செயல்பட்டால் திராவிடக் கட்சிகள் மட்டுமல்ல பாஜகவையும் எதிர்ப்போம் என்று மன்னார்குடி ஜீயர் கூறினார்.
கடந்த மாதம் தஞ்சை அருகே களிமேடு பகுதியில் கோயில் திருவிழாவில் தீ விபத்து நேர்ந்த பகுதியை பார்வையிடச் சென்ற மன்னார்குடி செண்பக மன்னார் செண்ட அலங்கார ஜீயர், செய்தியார்கள் சந்திப்பின் போது, இந்துக்களுக்கு விரோதமாக செயல்பட்டால் அமைச்சர்கள் சாலையில் நடமாட முடியாது என கூறினார்.
இதையும் படிக்க | பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு: 90.07% பேர் தேர்ச்சி
ஜீயர் கருத்துக்கு பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் திராவிடர் கழகம் மற்றும் திமுக வழக்குரைஞர்கள் பிரிவு சார்பில் மன்னார்குடி காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்து மதத்திற்கு எதிராக செயல்பட்டால் திராவிடக் கட்சிகள் மட்டுமல்ல; பாஜகவையும் எதிர்ப்போம் என்று மன்னார்குடி ஜீயர் கூறினார்.
மேலும், சிதம்பரம் கோயில் விவகாரத்தில் அறநிலையத்துறை தலையிடுவது இந்து விரோத செயல் என கூறினார்.