கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

அதிமுக பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு! ஓ.பி.எஸ். கோரிக்கையை நிராகரித்தது காவல் துறை

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி தரக்கூடாது என்ற ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கோரிக்கையை ஆவடி காவல் துறை நிராகரித்தது.

News image
Updated On :22 ஜூன் 2022, 10:39 am IST

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி தரக்கூடாது என்ற ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கோரிக்கையை ஆவடி காவல் துறை நிராகரித்தது.

அதிமுக பொதுக்குழு கூட்டம் தனி நபரின் உள் அரங்கத்தில் நடப்பதால் அதில் தலையிட முடியாது என ஆவடி காவல் துறை விளக்கம் அளித்துள்ளது. 

காவல் துறையினரின் இந்த பதிலைப் பொறுத்து எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து அதிமுக பொதுக்குழு கூட்டம் கட்டாயம் நடைபெறும் என த் தெரிகிறது.

சென்னை வானகரத்தில் நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு அனுமதி தரக்கூடாது, பாதுகாப்பு தரக்கூடாது என வலியுறுத்தி  ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து நேற்று ஆவடி காவல் ஆணையரகத்திற்கு மனு மூலம் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. 

தற்போது ஓ.பி.எஸ். தரப்பிலிருந்து அளிக்கப்பட்ட மனுவை ஆவடி காவல் ஆணையரகம் மறுத்துள்ளது. 

பொது இடத்தில் நடந்தால் மட்டுமே கூட்டத்திற்கு அனுமதி தரவோ, மறுக்கவோ முடியும் எனவும் சுட்டிக்காட்டிய காவல் துறை, தனி நபரின் உள் அரங்கத்தில் நடப்பதால் அதில் தலையிட முடியாது எனக் குறிப்பிட்டுள்ளது.

இதனால் உயர்நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படும் என ஆணையரம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.