சென்னை: நீதிமன்ற அறிவுத்தலின்படி அதிமுக பொதுக்குழுவில் முடிவுகள் எடுக்கப்படும் என்று தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை என நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி உத்தரவிட்ட நிலையில் தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.
இதையடுத்து மேல்முறையீட்டு மனுவை நீதிபதி துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு வியாழக்கிழமை அதிகாலை விசாரித்தது.
இருத்தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் இன்றைய அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எவ்வித தடையும் விதிக்கவில்லை. அதேசமயம், பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை தவிர மற்ற புதிய தீர்மானங்கள் குறித்து எந்த முடிவும் எடுக்கக்கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதன்மூலம் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | ஒற்றைத் தலைமை முடிவில் மாற்றமில்லை: ஜெயகுமார் பேட்டி
இதையடுத்து பன்னீர்செல்வம் பொதுக்குழுவில் கலந்துகொள்வார் என பன்னீர்செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி இருவரும் தனித்தனியாக பொதுக்குழு நடைபெறும் வானகரத்திற்கு புறப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அதிமுக பொதுக்குழு வருகை தந்துள்ள முன்னாள் எம்.பி தம்பிதுரையிடம் ஒற்றைத் தலைமை குறித்தும், உங்கள் ஆதரவு யாருக்கு என செய்தியாளர்கள் கேட்டனர்.
ஒற்றைத் தலைமை விவகாரத்தில் யாருக்கு ஆதரவு என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுப்பு தெரிவித்த தம்பிதுறை, நீதிமன்ற அறிவுத்தலின்படி அதிமுக பொதுக்குழுவில் முடிவுகள் எடுக்கப்படும் என்று தம்பிதுரை தெரிவித்தார்.