அதிமுக ஒற்றைத் தலைமை முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் குற்றம்சாட்டினாா்.
இதுதொடர்பாக வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் டி.ஜெயக்குமாா் கூறியது:
தமிழகம் முழுவதும் அதிமுக நிா்வாகிகள் கட்சிக்கு ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனா். ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமிதான் இருக்க வேண்டும் என்று நேரில் வந்து ஆதரவும் தெரிவித்து வருகின்றனா்.
அதிமுக ஒற்றைத் தலைமை முடிவில் எந்த மாற்றமும் இல்லை.
நீதிமன்ற தீர்ப்பால் எங்களுக்கு பின்னடைவு இல்லை. நீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பு அளிக்கிறோம். மேல்முறையீடு செய்வது குறித்து தலைமை முடிவு செய்யும் என்றாா்.