சென்னை: அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தீர்மானத்தோடு அடுத்த பொதுக் குழுக் கூட்டம் நடைபெறும் என்றும், அப்போது அதனுடன் இணைந்து 23 வரைவு தீர்மானங்களும் நிறைவேற்றப்படும் என்றும் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி அறிவித்தார்.
அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில், 23 வரைவு தீர்மானங்களையும் நிறைவேற்றிக் கொடுக்குமாறு எடப்பாடி பழனிசாமி வழிமொழிய, மேடைக்கு வந்த முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், அனைத்து தீர்மானங்களையும் நிராகரிப்பதாகக் கூறினார்.
அதிமுக பொதுக் குழுக் கூட்டம் வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் இன்று காலை 11.30 மணிக்குத் தொடங்கியது.
அப்போது, அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்படவிருந்த 23 வரைவு தீர்மானங்களும் முன்மொழியப்பட்டது. ஆனால், அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக சி.வி. சண்முகம் அறிவித்தார். இதனால், பொதுக் குழுக் கூட்டத்தில் கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து பேச வந்த துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, 23 வரைவு தீர்மானங்களையும் இந்த பொதுக் குழு நிராகரிப்பதாக அறிவித்தார். மேலும், ஒற்றைத் தலைமை என்ற தீர்மானத்தோடு அடுத்த பொதுக் குழு நடைபெறும். அந்த பொதுக் குழுவில், ஒற்றைத் தலைமை என்ற தீர்மானத்துடன் இணைத்து இந்த 23 தீர்மானங்களும் நிறைவேற்றப்படும் என்று கூறினார்.
மேலும், எப்போது ஒற்றைத் தலைமை என்ற தீர்மானம் பொதுக் குழுவில் நிறைவேற்றப்படுகிறேதா அப்போதுதான் மற்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். அதிமுகவின் அடுத்த பொதுக் குழுவில் ஒற்றைத்தலைமை என்ற தீர்மானம் நிச்சயம் நிறைவேற்றப்படும். இது அதிமுக தொண்டர்களின் விருப்பம் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வா்த்தகம்...வெளிநாடு வாழ் இந்தியா்களுக்காக புதிய வைப்புத் திட்டம்: 6.25% வரை வட்டி

மாணவா்களின் தலைமைத்துவ திறன்களை என்சிசி உருவாக்குகிறது: இயக்குநா் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ்

ஜோத்பூா்-சென்னைக்கு 5 நாள்கள் கோடைகால சிறப்பு ரயில்கள்







