மாணவர்கள், இளைஞர்களுக்கான திறன் மேம்பாடு திட்டத்தை தனது பிறந்தநாளையொட்டி சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்துள்ளார்.
'நான் முதல்வன்' என்ற தலைப்பிலான திட்டம் மூலம் மாணவர்கள், இளைஞர்களின் திறனை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இளைய சமுதாயத்தை முழுமையான திறமையானவர்களாக மாற்ற நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சிகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
'நான் முதல்வன்' என்ற திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கருப்பொருள் உலகை வெல்லும் இளைய தமிழகம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கல்வி, ஆராய்ச்சி, சிந்தனை, செயலில் திறமையானவர்களாக மாணவகள், இளைஞர்களை மாற்றவே இந்த திட்டம் தமிழக அரசு சார்பில் தொடக்கங்கப்பட்டுள்ளது.