பட்ஜெட் மீது விவாதம்: சென்னையில் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ஆலோசனைக் கூட்டம்

சென்னையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் இன்று நடைபெற்றது. 
பட்ஜெட் மீது விவாதம்: சென்னையில் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ஆலோசனைக் கூட்டம்

சென்னையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் இன்று நடைபெற்றது. 
இதுகுறித்து அதிமுக தலைமைக்கழம் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில், 2022-2023ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதையொட்டி, அதிமுக ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவரும், கட்சி இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி ஆகியோர் தலைமையில், எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று மாலை கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில், தமிழ்நாடு சட்டப்பேரவையில், நடைபெறவுள்ள நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின்போதும், மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகள் மற்றும் தொகுதிப் பிரச்னைகள் குறித்தும், கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து, கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆலோசனை வழங்கினார்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com