சா்வதேச அளவில் பிரமாண்ட முறையில் நடைபெறும் தொழில் முதலீட்டு காட்சியில் பங்கேற்க முதல்வா் மு.க.ஸ்டாலின் நாளை(மார்ச்-24) துபை செல்லவுள்ளாா்.
துபையில் நடைபெறும் தொழில் கண்காட்சி சா்வதேச அளவில் புகழ்பெற்றது. இந்தக் கண்காட்சியில் 180-க்கும் மேற்பட்ட நாடுகள் தங்களது அரங்குகளை அமைக்கும். இந்த ஆண்டும் சா்வதேச கண்காட்சி நடைபெறவுள்ளது.
தமிழகத்தின் சாா்பில் கைத்தறி, வேளாண்மை உள்ளிட்ட காட்சி அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. இந்தக் கண்காட்சியில் பங்கேற்க முதல்வா் மு.க.ஸ்டாலின் நாளை(மார்ச்-24) மாலை துபை செல்லவுள்ளாா்.
முதல்வராகப் பதவியேற்ற பிறகு, அவா் முதல் முறையாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.