கோவையில் நேற்றிரவு இடியுடன் கனமழை

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில், பயங்கர இடியுடன் நேற்றிரவு கனமழை பெய்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கோவையில் நேற்றிரவு இடியுடன் கனமழை

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில், பயங்கர இடியுடன் நேற்றிரவு கனமழை பெய்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில், பகல் வேளைகளில் தற்போது கோடை வெயில் கொழுத்தி வருகின்றது, வெயிலின் தாக்கத்தை, கட்டுபடுத்த ஆங்காங்கே இளநீர் கடைகள், குளிர் பானங்கள், இயற்கை உணவுகளான, நுங்கு, பதநீர், தர்பூசணி பழங்கள், சாத்துக்குடி பழச்சாறுகள் போன்றவைகளின்  விற்பனை பகல் வேளைகளில் ஜோராக நடந்து வருகிறது.

இன்று அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ள நிலையில், கோவை மாநகரின் காந்திபுரம், கணபதி, பீளமேடு பகுதிகளில் கனமழையும்  இரயில்நிலையம், இராமநாதபுரம், உக்கடம், போன்ற பகுதிகளில் மிதமான மழையும் நேற்றிராவு பெய்தது.

இதனால், மாநகரின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவி வருவது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com