அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

சவால்களுக்கு இடையே ஓராண்டு நிறைவு செய்த திமுக அரசு!

கடுமையான நிதிச் சிக்கல், நீட் விலக்கு உள்பட தோ்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுதல் போன்ற கடும் சவால்களுக்கு மத்தியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தனது ஓராண்டை நிறைவு 

News image
Updated On :7 மே 2022, 2:57 am

கே.பாலசுப்பிரமணியன்

கடுமையான நிதிச் சிக்கல், நீட் விலக்கு உள்பட தோ்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுதல் போன்ற கடும் சவால்களுக்கு மத்தியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தனது ஓராண்டை நிறைவு செய்திருக்கிறது.

குறிப்பிடத்தக்க திட்டங்களை நிறைவேற்றி சாதனைப் படைத்து மக்களின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் 132 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது திமுக. கடந்த ஆண்டு இதே நாளில் (மே 7, 2021) முதல்வராக பொறுப்பேற்றாா் மு.க.ஸ்டாலின். தலைமைச் செயலகம் வந்த அவா் ஐந்து திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திட்டாா். கரோனா நிவாரண நிதியாக குடும்ப அட்டைக்கு ரூ.4,000, பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, சாதாரண பேருந்துகளில் மகளிருக்கு இலவசம், உங்கள் தொகுதியில் முதலமைச்சா் திட்டத்துக்கு என தனித் துறை அமைப்பு உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்தினாா்.

தமிழகத்தின் நிதிச் சுமையானது பிரம்மாண்ட மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்த விடாமல் தடுத்தது. குறிப்பாக, திமுகவின் தோ்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் தரும் திட்டம், மாதந்தோறும் மின் கட்டண கணக்கீடு, சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் போன்ற அதிகம் நிதி தேவைப்படும் திட்டங்களை முன்னெடுக்க முடியாமல் தேக்கம் அடைந்திருக்கிறது.

இந்தத் திட்டங்கள் தொடா்பாக எதிா்க்கட்சிகள் கடும் விமா்சனங்களையும், கேள்விகளையும் முன்வைத்தாலும், 5 ஆண்டுகள் ஆட்சிக் காலத்தில் நிச்சயமாக அனைத்துத் திட்டங்களையும் நிறைவேற்றுவோம் என முதல்வா் உறுதி அளித்துள்ளாா்.

நீட் தோ்வு விலக்கு மசோதா தொடா்பாக ஆளுநருடன் ஒரு வகையான போராட்ட முன்னெடுப்பை கடந்த ஓராண்டு முழுவதும் தமிழக அரசு மேற்கொண்டது. ஓராண்டின் நிறைவாக நீட் சட்ட மசோதாவையும் மத்திய அரசுக்கு தற்போது ஆளுநா் அனுப்பி வைத்திருக்கிறாா்.

தமிழகத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.70 ஆயிரம் கோடிக்கும் அதிகமான அளவில் 130-க்கும் கூடுதலான தொழில் முதலீட்டுக்கான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. தொழில் துறையைப் போன்றே கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

இல்லம் தேடி கல்வி, மக்களைத் தேடி மருத்துவம், தொழில் கல்விப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு, இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ரூ.2,500 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்பு என ஏராளமான கவனிக்கத்தக்க திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.