சென்னை: தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை சிறப்பாக நிலைநாட்டி வருகிறோம் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
காவல்துறை மானியக் கோரிக்கை மீது தமிழக முதல்வர் ஸ்டாலின் பதிலுரை ஆற்றினார்.
பதிலுரையில், மதம், சாதி, வன்முறையை தூண்டும் வகையிலான பேச்சுக்கள் தடுக்கப்பட வேண்டும். சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டுதல் குற்றங்களைத் தடுக்க முன்னுரிமை, காவல்துறை - மக்களுக்கு இடையே நல்லுறவை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எந்த திசையிலிருந்து சிபாரிசு வந்தாலும் சட்டத்தின் பக்கம் நின்று காவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றங்கள் முன்கூட்டியே தடுக்கப்பட்டுள்ளன. ஒரு காவலர் செய்யும் தவறு, ஒட்டுமொத்த அரசுக்கும் குறையாக அமையும்.
அங்கொன்றும் இங்கொன்றும் நடக்கும் சம்பவங்களை வைத்து ஒட்டுமொத்த காவல்துறையை களங்கப்படுத்த வேண்டாம். புதிய முதலீடுகள் இதுவரை இல்லாத அளவுக்கு தமிழகம் நோக்கி வந்து கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டார்.